பேராசிரியர் தங்க.ஜெயராமனின், ‘தேர்தலோடு அரசியல் தீர்ந்துபோகாது’ கட்டுரை அரசியல் செயல்பாட்டின் முழுப் பரிணாமத்தையும் எடுத்துக் காட்டியுள்ளது. மக்கள் ஓட்டுப் போட்டு ஆட்சியாளர் களைத் தேர்ந்தெடுக்கும் முறை இருப்பதால் மட்டுமே, ஒரு சமூக அமைப்பு முழுமையான மக்களாட்சி அமைப்பாக மாறிவிடாது. மக்களாட்சி நெறிமுறை களையும் விழுமியங்களையும் பின்பற்றக்கூடிய அரசியல் இயக்கங்கள் வேண்டும்.
மக்களாட்சி நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வும், மக்களாட்சி அமைப்பில் அரசியல் கட்சிகளின் பங்கு என்னவாக இருக்க முடியும் என்பதைப் பற்றிய தெளிவும் கல்வி மூலமாக மக்களுக்கு வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் பொறியாளர்களையும் அறிவியல் வல்லுநர்களையும் உருவாக்கும் இடமாக மட்டுமே இல்லாமல் அரசியல் தலைவர்களை உருவாக்கும் இடங்களாக மாற வேண்டும். இத்தகைய அரசியல் விழிப்புணர்வூட்டல் இப்போதுதான் தமிழ்நாட்டில் வெகுமக்களை நோக்கி நடைபெறத் தொடங்கியுள்ளது என்பதற்கான உதாரணமாக இக்கட்டுரையைப் பார்க்க முடிகிறது.
- சு.மூர்த்தி, மக்களாட்சிக்கான கல்வி இயக்கம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
வணிகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago