நிதிநிலை அறிக்கை என்ன சம்பிரதாயக் கடமையா?

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் 2015-16 ம் நிதியாண்டுக்கான வரவு - செலவு அறிக்கையைப் பற்றிய தங்களின் 'மீள்வது எப்போது?' தலையங்கம் புள்ளிவிவரங்களுடன் தெளிவாக அலசியிருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கான செலவுகள் அதிகரிக்கின்றன. ஆனால், வரவு அவ்வளவாக அதிகரிப்பதில்லை. (இந்தக் கணக்கில் டாஸ்மாக் வரவைச் சேர்க்க வேண்டாம்) அப்படியிருக்கும்போது, தமிழக அரசின் இந்த வரியில்லா நிதிநிலை அறிக்கை என்பது கிராமங்களில் உள்ள ஒரு சொல் வழக்கின்படி, ‘ஆட்டைத் தூக்கி மாட்டில் போடு; மாட்டைத் தூக்கி ஆட்டில் போடு’ என்பதைப் போல ஒன்றில் குறைத்து மற்றொன்றில் அதிகப்படுத்தித்தான் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாகக் கூறினால், தமிழக அதிமுக அரசின் இன்றைய நிலையிலிருந்து பார்த்தால், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால் அரசு இயந்திரம் ஸ்தம்பித்துப் போகும் என்ற காரணத்தால், ஒரு சம்பிரதாயத்துக்காக கடமையே என்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையாகத்தான் தோன்றுகிறதே தவிர, மக்கள் நல அரசாக ஒரு ஆட்சியின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கையாக இது இல்லை என்பது தெளிவாகப் புலனாகிறது.

- வீ. சக்திவேல்,தே. கல்லுப்பட்டி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்