ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அசம்பாவிதங்களும் மிகுந்த கவலையளிக்கின்றன. மாடுபிடி வீரர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் உயிரிழப்பதும் காயமடைவதும் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் காட்டப்படும் மெத்தனத்தைக் காட்டுகின்றன. ஏற்கெனவே, ஜல்லிக்கட்டு தொடர்பான எதிர்மறையான கருத்தாக்கம் நிலவும் சூழலில், இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு பொதுவாகவே ஆபத்து நிறைந்ததுதான். மதுரை பாலமேட்டில் மாடுபிடி வீரர் காளை முட்டி உயிரிழந்தது, திருச்சி சூரியூரில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தது என விபரீதங்கள்இந்த முறையும் தொடர்கின்றன. தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காணச் சென்றிருந்த 14 வயதுச் சிறுவன், காளை முட்டி உயிரிழந்தது இன்னும் சோகம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
9 mins ago
இந்தியா
29 mins ago
தமிழகம்
52 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago