தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்து, உயர்கல்வியில் சேராத 8,588 மாணவர்களின் தரவுகளைத் திரட்டி, அவர்களுக்குத் தனித்தனியாக ஆலோசனைகள் வழங்கப் பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானவை என்பதோடு, முன்மாதிரியானவையும்கூட. 12ஆம் வகுப்புடன் அல்லாமல், உயர்கல்வியில் சேரும்போதுதான் ஒரு மாணவரின் கல்வி வாழ்க்கை முழுமையடைகிறது. மேலும், உயர்கல்வியே ஒரு மாணவரின் எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளமாகவும் அமையும். அந்த வகையில் 12ஆம் வகுப்புக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்கு நகராத மாணவர்களை, அதை நோக்கி நகர்த்தும் முன்னெடுப்பு, மாணவர்களின் நலனில் பள்ளிக் கல்வித் துறை கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.
பொதுவாக, கடைசி நிலைப் படிப்பை முடிக்காமல் இடையில் நிற்பவர்கள், இடைநிற்றல் என்ற வரையறைக்குள் வருவார்கள். பள்ளிக் கல்வியில் 12ஆம் வகுப்பு என்பது கடைசி வகுப்பு. ஆனால், அதுவே உயர்கல்விக்குச் செல்வதற்கான நுழைவுவாயிலாகவும் அமைந்திருக்கிறது. இந்தப் பார்வையில் அணுகும்போது, பள்ளிக் கல்விக்குப் பிறகு ஒரு மாணவர் உயர்கல்வியைத் தொடரவில்லை என்றால், அதையும் கல்வி இடைநிற்றலாகவே கருத வேண்டும். ஓர் அறிவார்ந்த சமுதாயத்தைக் கல்வியால் மட்டுமே உருவாக்க முடியும் என்ற சூழலில், உயர்கல்விக்குச் செல்லாமல் போவது அதற்கு எதிர்மறையான சூழலைத்தான் உருவாக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago