உள்ளத்திலிருந்தும் விலகட்டும் சாதிய ஒட்டுகள்!

By செய்திப்பிரிவு

சென்னை மாநகரின் சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி அடையாளங்கள் விரைவில் களையப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 13வது மண்டலம், 171 வார்டில் உள்ள ஒரு தெருவின் பெயர்ப் பலகையில் சாதிப் பெயரை நீக்கியிருப்பதை அடுத்து எழுந்துள்ள இந்த எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் பள்ளி மாணவர்களுக்கான அனைத்துப் பாடநூல்களிலும் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் பெயர்களுக்குப் பின்னால் குறிப்பிடப்பட்டுவரும் சாதிப் பெயர்கள் தவிர்க்கப்பட்டன.

ஏற்கெனவே, இந்த முயற்சிக்குப் பெரும் பாராட்டுகள் குவிந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தெருக்களின் பெயர்களிலும் சாதிய ஒட்டுகளைத் தவிர்க்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். செங்கல்பட்டில் 1929-ல் நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டில், தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் போட்டுக்கொள்ளும் வழக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஒரு நூற்றாண்டில் இந்தத் தீர்மானம் கட்சி, கொள்கை வேறுபாடுகளைக் கடந்து பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்