ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 03 | ‘அன்னவஸ்திர’மும் ‘அறுப்புக் கூலி’யும்!

By செய்திப்பிரிவு

சமூக வரலாற்றாய்வில் எல்லா சமூக நிகழ்வுகளையும் உலக அளவில் பொதுமைப்படுத்திப் பார்க்க முடியாது. பெண்களின் தனிச் சொத்துரிமை குறித்த ஆய்வும் இதில் அடங்கும். காலனிய ஆட்சியின் உரிமையியல் சட்டத்தில் குடும்பத்தின் பூர்விகச் சொத்து, தந்தையின் சொத்து, கணவன் ஈட்டிய சொத்து ஆகியவற்றில் பெண்ணுக்குரிய உரிமை மறுக்கப்பட்டிருந்தது. எனினும் சில இனக்குழுச் சாதிகளில் மரபுவழிச் சட்டங்கள் என்ற பெயரில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது.பெண்கள் அனைவருக்குமான சொத்துரிமையை சாதியும் மதமும் முடிவுசெய்துவந்ததன் பின்னணியில், இந்துப் பெண்கள் அனைவருக்குமான சொத்துரிமையை அம்பேத்கர் அறிமுகப்படுத்த முயன்றார். ஆனால், அது கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகினார். கணவர் சொத்தில் மனைவியின் உரிமையை ஏற்றுக்கொள்ளும் சட்டம்,இந்திய அளவில் 1956இல்தான் நடைமுறைக்குவந்தது.

இடைக்காலத் தமிழகத்தில்... இடைக்காலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் பெண்களின் தனிச் சொத்துரிமை குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. பெண்கள் சொத்துக்களை விற்றதையும் வாங்கியதையும் கொடையாக வழங்கியதையும் 348 கல்வெட்டுக்களின் துணையுடன் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் கனகலதா முகுந்த் என்ற ஆய்வாளர் (EPW, 25 ஏப்ரல் 1992). இந்நிலையில், மாற்றம் ஏற்பட்டுத் தனிச் சொத்துரிமை பெண்களிடமிருந்து பறிக்கப்பட்டமைக்கான காரணம் ஆய்வுக்குரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்