புதுமைப்பித்தன் எழுத்து 100: புதுமைப்பித்தனை வாசித்தல்

By பால்நிலவன்

பாரதியை ‘மகாகவி’ என்று சொல்வதை ஆரம்பத்தில் ஆய்வாளர்கள் சிலர் ஏற்க மறுத்தனர். அவரது பாடல்களின் சொல்லாற்றலை, பொருண்மை அழகைத் தரிசித்த தமிழ்ச் சமூகம், அவரது மகோன்னத இடத்தை உறுதிசெய்த பிறகு, அவரை ‘மகாகவி’ என ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். புதுமைப்பித்தன் மறைவுக்குப் பின் அவருக்கு நேர்ந்த கதியும் கிட்டத்தட்ட இதேதான். சுந்தர ராமசாமி, தொ.மு.சி. போன்றவர்கள் ‘புதுமைப்பித்தன் மலர்’ வாயிலாக மீண்டும் அவரது மாபெரும் ரூபத்தை மீட்டெடுத்தனர். பின்னர்தான் பாரதி, புதுமைப்பித்தன் என்ற வரிசைப் பாதையைத் தமிழின் நவீன மரபு கண்டடைந்தது. அதில் ஜெயகாந்தன், ஆதவன், சுந்தர ராமசாமி, வண்ணநிலவன் என அழகிய வரிசை உருவானது.

புதுமைப்பித்தன் எழுத்து வீச்சு: இன்றைய தேடல் நிறைந்த புதிய வாசகன் மட்டுமல்ல, நாளைய வாசகனுக்கும் புதுமைப்பித்தனிடம் பெற ஏதோ ஒன்று மீதமிருக்கிறது. அந்தத் தேடலுக்குப் பெயர் புதுமை. சுந்தர ராமசாமி அந்தப் பெயரைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் எக்கச்சக்கமாகக் கிண்டலடித்திருக்கிறாராம். அதென்ன ‘புதுமைப்பித்தன்’, புதுமையின் மீது பித்து அதிகமான நிலையோ என்று அவருக்குக் கேள்விகள் எழுந்தன. பித்தம் அதிகமானால் அதில் தெளிவு இருக்காதே என்றெல்லாம் அவர் ஆரம்பத்தில் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாராம். ஆனால், மரபான கதை சொல்லும் பாதைக்கு மாறாகப் புதுமைப்பித்தன் குறுக்குப் பாய்ச்சல் செய்து, புதிய இலக்கியப் பயிர்களைத் தழைக்கச் செய்ததைக் காணநேர்ந்த பிறகுதான், அவர் தவிர்க்க முடியாதவர் என்ற புரிதல் சு.ராவுக்கு ஏற்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

தமிழகம்

2 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

36 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்