கூர்நோக்கு இல்லச் சிறுமிகள்: உரையாடல் தொடங்கட்டும்

By செய்திப்பிரிவு

மும்பையின் கோவண்டியிலுள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறுமிகள் தப்பியோட்டம் என்கிற செய்தி கடந்த செப்டம்பர் 12 அன்று ஊடகங்களில் வெளியானது. கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகள், கூர்நோக்கு இல்லத்தில் சிறுமியைப் பலாத்காரம் செய்த சக சிறுமிகள் என்கிற செய்திகள் பிற மாநிலங்கள் மட்டுமின்றித் தமிழகக் கூர்நோக்கு இல்லங்களிலிருந்தும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. கடந்த பிப்ரவரி 2 அன்று நாகர்கோவிலில் அரசுப் பள்ளி அருகே பெண் சிறார்களுக்கான கூர்நோக்கு இல்லக் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. ஆனால், குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுமிகளுக்கான கூர்நோக்கு இல்லத்தை அரசுப் பள்ளி அருகே தொடங்குவது மற்ற சிறார்களுக்கு நல்லதல்ல எனக் கூறி, கட்டுமானப் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

சிறு வயதிலேயே கருத்தரித்து, பிறந்த குழந்தையை வளர்க்க இயலாமல் சமூகத்தின் கேலிப்பேச்சுக்கும் குற்றப்பார்வைக்கும் அஞ்சி, அக்குழந்தையைக் குளத்தில் வீசிக் கொன்ற சிறுமி, காதலனுடன் செல்வதற்காக மூதாட்டியைக் கொன்று நகையைத் திருடிய சிறுமி எனக் கூர்நோக்கு இல்லத்தில் சிறுமிகள் சேர்க்கப்பட்டதற்கான காரணங்களுடன் ஒன்றிரண்டு செய்திகள் இணையதளங்களில் காணப்படுகின்றன. எனினும் இச்செய்திகளின் மீதான அக்கறை நமக்குப் பெரிதாக இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் வளர்வதற்கும் சிறுமிகள் அங்கு வளர்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களைப் பற்றிப் பேசப்பட்ட அளவுக்குச் சிறுமிகளைப் பற்றி ஊடகங்களில்கூடப் பேசப்படவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்