ம.ரா.போ.குருசாமி நூற்றாண்டு: மரபும் புதுமையும் கலந்த பேராளுமை

By க.பஞ்சாங்கம்

ராஜபாளையம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது மம்சாபுரம் என்கிற அழகான சிற்றூர். அந்த ஊரிலிருந்து மலைகளைப் பார்த்தால், கண்களைத் திரும்ப எடுக்க முடியாது. அப்படிப்பட்ட அந்த ஊரில்தான் ஜூன் 15, 1922இல் பிறந்த ம.ரா.போ.குருசாமி என்று அறியப்படும் ‘மம்சாபுரம் ராக்கப்பிள்ளை போத்தலிங்கம் குருசாமி’ அக்டோபர் 6, 2012இல் தனது 90ஆவது வயதில் கோவை மாநகரில் தன் பயணத்தை முடித்துக்கொண்டார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு, காலனித்துவ அரசு முறை வழங்கிய புதிய சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தோன்றிய தமிழின் இரண்டாம் மறுமலர்ச்சி இயக்கத்திற்கான கருத்தாக்கங்களை உற்பத்திசெய்து, தமிழகம் முழுவதும் தமிழ்க் கல்வி என்ற பெயரில் விதைத்துக்கொண்டிருந்த தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் படிப்பதற்குச் சென்றார். அதுதான் அவருடைய பிற்கால வாழ்வு அனைத்தையும் எழுதுகிற ஆதார சக்தியாக அமைந்துவிட்டது. கூடவே, சென்னை மாநகருக்குள் இடம்பெயர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் பி.ஓ.எல். (ஹானர்ஸ்) என்ற தமிழ்ப் பட்டப்படிப்பு படிக்கச் சேர்ந்து, அன்றைய பெரும் பேராசிரியர்களான அ.மு.பரமசிவானந்தம், அ.சா.ஞானசம்பந்தன், மு.வரதராசனார், துரை.அரங்கனார் ஆகியோரிடம் தமிழ் கற்றுத் தெளிந்ததும் ம.ரா.போ.குருசாமி என்கிற ஆளுமை உருவாக்கத்திற்குத் துணைபோயுள்ளன என்றும் அறிகிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 secs ago

தமிழகம்

31 mins ago

வணிகம்

46 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்