புலம்பெயர்ந்து அயலகத்தில் வாழும் தமிழர்களைப் பற்றியும், அவர்களின் தமிழ்ப் படைப்புகளையும் பங்களிப்புகளைப் பற்றியும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் விரிவான அறிமுகம் இல்லை. 1980-களுக்குப் பிறகு, உள்நாட்டுப் போராட்டம் காரணமாக இலங்கைத் தமிழர்களும், கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள். தமிழர்கள் வாழும் அந்தந்த நாடுகளில் ஆட்சி அதிகாரத்திலும் கல்வியிலும் மேம்பட்டு நிற்கின்றனர். தாயகத்துக்குத் திரும்பும் சூழல் ஏற்பட்டால், தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் தெரிய வேண்டும் என்ற கவலையில், தமிழைப் பயிற்றுவிக்க அங்கு தொடங்கப்பட்ட தமிழ்ப் பள்ளிகள், இன்று புதிய வேகத்துடன் புதுப்புதுப் பாடத்திட்டங்களுடன் நடத்தப்படுகின்றன.
அமெரிக்கத் தமிழ் அகாடமி (ATA), கலிஃபோர்னியா தமிழ் அகாடமி, ஸ்காண்டினேவிய நாடுகளில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம், சுவிட்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை, அனைத்துலகத் தமிழ்க் கல்வி, பண்பாடு, அறிவியல் மேம்பாட்டு இணையம் (ஜெர்மனி), ஜெர்மன் தமிழாலயங்கள், ஆஸ்திரேலிய தமிழ்ப் பள்ளிகள், மொரீஷியஸ் மகாத்மா காந்தி தேசியக் கழகம், சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், மலேசிய அரசின் தமிழ்க் கல்விப் பிரிவு போன்றவை குறித்து நம் தமிழகத்து ஆசிரியர்கள், மாணவர்கள் யாதொன்றும் அறிவதற்கு வாய்ப்பில்லை. லண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தன்னார்வலர்கள் தமிழ் பயிற்றுவிப்பதை இங்குள்ள கல்வி வல்லுநர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இலங்கைத் தமிழ்க் கல்வி குறித்து நமக்கு அதிகம் தெரியாது. கனடாவில் வெளிவரும் தமிழ் இதழ்கள், நூல்கள், தமிழ்க் கல்வி குறித்தோ நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
2 hours ago