மருத்துவம் அனைவருக்குமான உரிமை!

By செய்திப்பிரிவு

‘அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு’ (யூ.எச்.சி.) என்ற திட்டத்துக்கு உயிர்கொடுப்பதற்குத் தற்போதைய கரோனா பெருந்தொற்று நெருக்கடி சரியான தருணம் ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. (அமெரிக்காவைத் தவிர்த்த) செல்வந்த நாடுகளில் மட்டுமல்ல பிரேசில், சீனா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அவற்றுள் சில நாடுகள், குறிப்பாக தாய்லாந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பே ‘அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்’பை நோக்கி அடியெடுத்துவைத்தன. தாய்லாந்தின் அப்போதைய தனிநபர் ஜிடிபி தற்போதைய இந்தியாவின் தனிநபர் ஜிடிபியைவிட அதிகம் கிடையாது. இந்தியா, அல்லது குறைந்தபட்சம் சில இந்திய மாநிலங்கள், துணிந்து காரியத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பிரிட்டனில் ‘தேசிய மருத்துவ சேவை’ (என்.எச்.எஸ்.) தொடங்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த உனைருன் பெவனின் (Aneurin Bevan) வார்த்தைகள் இந்தத் திட்டத்தின் நோக்கத்தைத் தெளிவுபட உணர்த்துகின்றன: “உடல்நலம் குன்றிய ஒருவரிடம் பணம் இல்லாததால் அவருக்கு மருத்துவச் சிகிச்சை மறுக்கப்படுமானால், அந்தச் சமூகத்துக்குத் தன்னை நாகரிகச் சமூகம் என்று கூறிக்கொள்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை.” 1946-ல் அமைக்கப்பட்ட போர் கமிட்டியை உந்தித் தள்ளியது இந்தச் சிந்தனைதான்; இந்தியாவும் தனக்கே உரிய ‘என்.எச்.எஸ் -மாதிரி’யான மருத்துவப் பராமரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்