தலை உடைந்து தொங்கும் எதிர்காலம்...

By செய்திப்பிரிவு

வீழ்ந்து கிடக்கும் தென்னந்தோப்புகள் அனைத்தும் வெறும் மரங்கள் அல்ல... அது இப்பகுதி இளைஞர்களின் 20 ஆண்டுகால உழைப்பு.

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வளைகுடா நாடுகளிலும் சிங்கப்பூரிலும் பணிபுரிகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்வது ஒரு வாழ்க்கை முறையாகவே மாறியிருக்கிறது. பெரும்பாலும் உடலுழைப்புத் தொழிலாளர்கள்தான்.

வெளிநாடுகளில் பத்துப் பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து உழைப்பது, அந்தப் பணத்தைக்கொண்டு உள்ளூரில் தென்னந்தோப்புகளை உருவாக்குவது என்று அவர்களின் வாழ்க்கை இருக்கிறது. ஒரு ஏக்கர் தென்னந்தோப்பிலிருந்து ஒரு ஆண்டுக்குத் தோராயமாக ஒரு லட்சம் ரூபாய். அந்தத் தோப்பை உருவாக்குவதற்குக் குறைந்தது பத்தாண்டு காலம் தேவைப்படுகிறது. பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் இருக்கக்கூடிய தென்னை மரங்கள் பாளை விடுவதற்கே ஏழெட்டு ஆண்டுகளாகிவிடும். மரம் முதிர்ந்து நல்ல காய்ப்பு காண வேண்டும் என்றால், பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இந்த தென்னந்தோப்புகளை உருவாக்குவதற்காக ஒரு தலைமுறை தங்கள் வாழ்க்கையையே செலவிட்டிருக்கிறது. அவர்களின் மொத்த முதலீடும் இப்போது நிர்மூலமாகி விட்டது. வெட்டுக்குத் தயாராக இருந்த தென்னை மரங்கள் எல்லாம் இப்போது தலை உடைந்து தொங்கி நிற்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

மேலும்