கற்பனையைவிட எதார்த்தத்தையும் உணர்வுகளையும் எழுதுவது சவாலானது; மயிலன் ஜி சின்னப்பனுக்கு அது கைகூடியிருக்கிறது. அவர் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பான ‘அநாமதேயக் கதைகள்’, உறவுகளை அவற்றில் விரவிக் கிடக்கும் சிடுக்குகளை மனித மனத்தின் கீழ்மையைச் சொல்கின்றன. உணர்வுகள் அனைத்தையும் வார்த்தைகளாக்கிவிட முடியாதுதான். ஆனால், அதன் எல்லை வரைக்கும் நீண்டு திரும்பும் முயற்சியை மயிலன் செய்துள்ளார்.
மயிலனின் எழுத்தில் மூன்று அம்சங்களைக் குறிப்பிடலாம். ஒன்று, கதைக்காக அவர் தேர்ந்தெடுக்கும் களம். மருத்துவராக இருப்பதாலேயே மருத்துவமனை தவிர்க்க இயலாத களமாகிவிடுகிறது. பன்னாட்டு மருத்துவப் பயிலரங்கு, வீடு, விடுதி, காயல், கேளிக்கை விடுதி, காவல் நிலையம், தென்னந்தோப்பு, திரையரங்கம் என வெவ்வேறு களங்களில் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இரண்டாவது, கதை சொல்லும் பாணி. எந்தக் கதையும் நேர்கோட்டில் பயணிக்காமல் கிளைகிளையாகப் பிரிந்து, வெவ்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. மூன்றாவது, உணர்வுகளின் கச்சிதக் கையாளல். குறிப்பாகப் பெண்ணின் மன உணர்வைக் கையாண்டிருப்பது. பெண்ணைப் பற்றி ஆண் எழுதுகையில் மிகையும் முரணும் இழையோடும். ஆனால், ‘ஐ-பில்’ கதை அப்படி அமைந்ததல்ல. பெண்ணின் மன நெருக்கடியை, உள்ளிருக்கும் குரூரத்தை, அது குரூரம் எனத் தெரிந்ததும் அதிலிருந்து வெளியேற நினைக்கும் தெளிவை, ஒன்றைச் சார்ந்திருக்கும்போது ஏற்படும் சிறுமையை, அதிலிருந்து விட்டு விடுதலையாகும்போது கிடைக்கும் துணிவை... இப்படிப் பெண்ணின் மனவெழுச்சியைக் கதையின் வழியே விரித்தபடி சென்றவிதம் இயல்பாக இருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago