நூற்றாண்டுக்கு முந்தைய உரைநடைத் தமிழில் வடமொழிச் சொற்கள் மிகுந்திருந்தன. கலைச்சொற்கள் மொழிபெயர்ப்பிலும் இந்நிலைதான். ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் உரைநடைத் தமிழில் வடமொழிக் கலப்பு வெகுவாகக் குறைந்திருப்பதைக் காணலாம். நல்ல தமிழ்க் கலைக்களஞ்சியமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்கு வித்திட்டது தனித் தமிழ் இயக்கம் எனத் தைரியமாக உரைக்கலாம். அந்தத் தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றத்தையும் வரலாற்றையும் மறைமலை அடிகளின் பெயரன் மறை. திரு. தாயுமானவன் இந்நூலில் திறம்பட விவரித்துள்ளார். இந்த இயக்கத்துக்குத் துணைநின்ற கொள்கைச் சான்றோர்களின் பங்களிப்பையும் முறைப்படி வரிசைப்படுத்தியுள்ளார்.
வடமொழியே இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் மூலம் என நம்பப்பட்ட காலத்தில், தமிழை மூலமாகக் கொண்ட திராவிட மொழிகள் பல உள்ளன என ஆராய்ந்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எழுதிய கால்டுவெல்லை முன்மொழிந்து இந்தக் கட்டுரையை ஆசிரியர் தொடங்குவது போற்றுதலுக்குரியது. தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றுவாயாகப் பாம்பன் சுவாமிகளின் ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். செய்யுளில் வடமொழிக் கலப்பு இருந்த காலகட்டத்தில் இந்த நூல் தனித் தமிழ்ச் சொற்களால் இயற்றப்பட்டது. இதன் முன்னுரையில் தமிழும் வடமொழியும் தனித்த இரண்டு மொழிகள். இவை தனித்தியங்கும் தன்மை கொண்டவை என்பதைப் பாம்பன் சுவாமிகள் தெளிவாக்கியுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
இந்தியா
9 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
36 mins ago
தமிழகம்
43 mins ago
இந்தியா
45 mins ago
சினிமா
58 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago