360 - ‘ஆயல்’ விருதுகள்

By செய்திப்பிரிவு

‘ஆயல் கலை இலக்கியப் பண்பாட்டுக் களம்' சார்பாக ‘ஆயல்’ இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. வாழ்நாள் சாதனையாளருக்கான ஆயல் விருது மார்க்சிய-பெரியாரிய சிந்தனையாளர், செயல்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்ட எஸ்.வி.ராஜதுரைக்கு வழங்கப்படவுள்ளது. புனைவிலக்கியத்துக்கான ஆயல் விருது தேவிபாரதிக்கு வழங்கப்படவுள்ளது. ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ்-மகராஜ்’, ‘நீர்வழிப் படூஉம்’ ஆகிய நாவல்களும் ‘பிறகொரு இரவு’, ‘கறுப்பு வெள்ளைக் கடவுள்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் தமிழுக்கு தேவிபாரதியின் முக்கியமான பங்களிப்புகள்.

கவிதைக்கான ஆயல் விருது சம காலத்தின் மிக முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான யவனிகா ஸ்ரீராமுக்கு வழங்கப்படவுள்ளது. ‘கடவுளின் நிறுவனம்’, ‘தலைமறைவுக் காலம்’, ‘யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் தமிழுக்கு இவரது பங்களிப்பு. வாழ்நாள் சாதனையாளர் விருது ஒரு லட்சம் ரூபாயையும் புனைவிலக்கியத்துக்கான விருது ஐம்பதாயிரம் ரூபாயையும் கவிதை இலக்கியத்துக்கான விருது ஐம்பதாயிரம் ரூபாயையும் கொண்டது. ஜூன் 4, 2022 அன்று கோவை ராஜஸ்தானி சங்க அரங்கில் விருது விழாவும் இலக்கியக் கூடுகையும் நடைபெறவிருக்கின்றன. விருதாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்