டீக்கடைகளில் நீங்கள் அருந்தும் தேநீர் தரமானதா? - எளிதில் கண்டறிய சில வழிமுறைகள்

By ஜி.காந்தி ராஜா

தெலங்கானா மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற தேயிலை அமோகமாக விற்பனை செய்யப்படுவதாகவும், அது மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதாகவும் தெலங்கானா தேயிலை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து, தெலங்கானா தேயிலை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் கூறுகையில், "ஆரம்பத்தில் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் மட்டுமே இந்தப் பிரச்சினை இருந்தது, ஆனால் தற்போது தெலங்கானா மற்றும் ஆந்திராவிலும் பரவியுள்ளது. இது மற்ற மாநிலங்களிலும் கண்டறியப்படுகிறது" என்கிறார்கள்.

இதனையடுத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேயிலை தூள் கலப்படம் உள்ளதா என்பதை பரிசோதிப்பதற்கான எளிய வழிமுறைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி பி.சதீஷ்குமார்.

"டீ தயாரிப்புக்கு, தேயிலையிலிருந்து பெறப்பட்ட டீத்தூள் பயன்படுத்தப்படுகிறது. டீ நல்ல நிறத்திலும், வாசனையுடனும் இருந்தால் மட்டுமே தரமிக்க டீத்தூள் என பலரும் நம்புகின்றனர். இதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சிலர், டீத்தூளில் நிறமிகள் மூலம் செயற்கையாக நிறம் ஏற்றுவது மற்றும் ரசாயனங்கள் மூலம் வாசனை சேர்ப்பது உள்ளிட்ட மோசடிகளை செய்கின்றனர். இவ்வாறு செயற்கையாக நிறமி, வாசனை சேர்ப்பதால், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. டீக்கடைகள் அனைத்தும் தரமிக்க டீத்தூள் மற்றும் உணவுப்பொருட்கள் கொண்டு விற்பனை செய்யப்பட வேண்டும்.

கலப்படத்தை கண்டறிவது எப்படி?

பாலில் கலக்கும்போது, நிறம் அதிகமாக கிடைக்க டீத்தூளில் ரசாயன நிறமிகள் அதிகம் கலக்கப்படுகின்றன. தரமான டீத்தூள் மெதுவாக தண்ணீரில் கீழிறங்கும். மரத்தூள் போன்ற பொருட்கள் கலந்திருந்தால், தண்ணீரில் தனியாக மிதக்கும். தரமான டீத்தூளை சுடு தண்ணீரில் போட்டால் மட்டுமே தண்ணீரின் நிறம் மாறும். கலப்பட டீத்தூளை சாதாரண நீரில் போட்டாலே தண்ணீரின் நிறம் மாறும். சாதாரண நீரில் கலப்பட டீத்தூளை போடும்போது நீரின் மட்டத்தில் டம்ளரில் வளையம் ஏற்படும். இதன்மூலம் கலப்பட டீத்தூளை அடையாளம் காணலாம்.

"தரம் குறைந்த டீத்தூளில் செயற்கை வண்ணம் பூசப்பட்டால், அதனை வெந்நீரில் கலந்தவுடன் கெட்டியான நிறத்தை வெளியிடும். இது நல்ல தரம் வாய்ந்தது என்ற தோற்றத்தை அளிக்கும்."

சாதாரண ஃபில்டர் பேப்பரில் டீத்தூளைக் கொட்டி நான்கு துளி நீர்விட்டால், பேப்பரில் சிவப்பு நிறம் தனியாகப் பிரிவது தெரிந்தால் தரமான டீத்தூள் என அறியலாம்.

எனவே நாம் ஒரு டீக்கடையில் டீ அருந்தும்போது, நமக்கு சந்தேகம் ஏற்பட்டால் பொதுமக்கள் தைரியமாக அந்த டீத்தூளை அவர்களிடமே கேட்டு வாங்கி அங்கேயே தண்ணீரில் போட்டுப் பார்த்தால் அது கலப்படமா இல்லை தரமானதா என்று தெரிந்துவிடும்.

நாம் உண்ணும் உணவு தரமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருப்பதே நோயற்ற வாழ்வுக்கு முதன்மையானது. அந்தவகையில் கலப்படப் பொருள்களை தொடர்ந்து உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலைக்குக்கூட ஆளாகலாம். இந்த கலர் கலப்படத்துடன் கூடிய கலப்படத் தேயிலையில் உருவான தேநீரை ஒருவர் சாப்பிட்டால் அல்சர் மற்றும் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் கூட இருக்கிறது.

எனவே பொதுமக்கள் தைரியமாக செயல்பட்டு இந்தமாதிரியான குற்றச் செயல்களைத் தட்டிக் கேட்கலாம். கடை உரிமையாளரிடம் தைரியமாக கேள்வி எழுப்பலாம். புகார் கொடுக்கும்பட்சத்தில் இத்தகைய தவறுகள் தொடர்ந்து நடக்கும் அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டு அவர்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று மற்ற இடங்களில் நடந்தாலும் பொதுமக்கள் 94448 11717, 94440 42322 என்ற எண்களுக்கு தகவல் அளிக்கலாம். பொருட்களை வாங்கும்போது பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பி.சதீஷ்குமார், உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி, சென்னை.

மேலும் அவர் கூறுகையில், ”விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் பட்டாணி, பட்டர் பீன்ஸ் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் தங்களது குடோன்களில் வைத்து நிறத்திற்காக தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்து விற்பனை செய்கிறார்கள். இது கேன்சர் நோய் வரவழைக்கக் கூடிய கொடிய ரசாயனம் ஆகும். இதுவும் தடை செய்யப்படுகிறது.

அதேபோல் குழந்தைகளைக் கவரும் விதமாக கலருக்காக அப்பளங்களிலும் ரசாயனம் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனையும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்வேண்டும்" என்கிறார் உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி பி.சதீஷ்குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்