புதுடெல்லி
பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் 1% பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.
இதன் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''இந்தியாவில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தைச் சேர்ந்தவர்கள், தொற்றாத நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளும் 10 முதல் 19 வயது வரையிலான வளரிளம் பருவத்தினரும் என்சிடி எனப்படும் தொற்றா நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
தேசிய ஊட்டச்சத்துக் கணக்கெடுப்பு 2016-18 இன் ஆய்வுப்படி, பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் பத்தில் ஒருவர், நீரிழிவுக்கு முந்தைய நிலையில் (pre-diabetic) உள்ளனர்.
பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் 1% பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பள்ளி செல்லும் குழந்தைகளில் 3% பேருக்கும் இளம் பருவத்தினர் 4% பேருக்கும் அதிகக் கொழுப்பு உள்ளது.
நாள்பட்ட சிறுநீரக நோய்களால் 7 சதவீத பள்ளிக் குழந்தைகளும் இளம் பிராயத்தினரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இளமைப் பருவத்தில் இருக்கும் 5% பேர், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இந்தியக் குழந்தைகளில் 35% பேர், வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர். பள்ளி வயது குழந்தைகளில் 22 சதவீதம் பேருக்கு இதே பிரச்சினை உள்ளது. வளரிளம் பருவத்தினரில் 24% பேர், அவர்களின் வயதுக்கு மிகவும் ஒல்லியானவர்களாக இருக்கின்றனர்.
பிறந்த குழந்தைகளிடமும் இதே குறைபாடு உள்ளது. போதிய வளர்ச்சி இன்மையாலும் எடை குறைபாட்டாலும் 7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வயது வரை, இரண்டு குறைபாடுகளும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. அதேபோல வைட்டமின் ஏ, வைட்டமின் டி, துத்தநாகக் குறைபாட்டாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு ஆய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago