பண தட்டுப்பாட்டை சமாளிக்க ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறிய காஷ்மீர் கிராமம்

By செய்திப்பிரிவு

காஷ்மீரின் பத்காம் மாவட்டத் துக்கு உட்பட்ட லனூரா கிராமம், ஸ்ரீநகரில் இருந்து 30 கிமீ தொலை வில் உள்ளது. மாநிலத்திலேயே ரொக்கமில்லா பணப் பரிவர்த் தனையை முழுமையாக மேற் கொள்ளும் முதல் கிராமமாக லனூரா திகழ்கிறது.

பண மதிப்பு நீக்க நடவடிக் கையைத் தொடர்ந்து, மின்னணு முறையிலான ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை முறையை மத்திய அரசு ஊக்குவித்து வரு கிறது. ரொக்கமாக பணத்தை கையாளுவதற்கு பதிலாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு நாட்டுமக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கான உதவிகளை பொது மக்களுக்கு வழங்குமாறு அதிகாரி களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சிஎஸ்சி இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா நிறுவனமும், தேசிய தகவல் மையமும் இணைந்து, லனூரா கிராமத்தில் மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வை மக்க ளிடையே ஏற்படுத்தத் தொடங்கின.

லனூரா கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் வீதம், 150 பேருக்கு மின்னணு முறையில் பணம் செலுத்தும் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதன் மூலம் கிராமம் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு மாறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

17 mins ago

சினிமா

35 mins ago

வாழ்வியல்

17 mins ago

தமிழகம்

53 mins ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்