15 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிப்பு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

By செய்திப்பிரிவு

புது டெல்லி: 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கழகங்கள் வசமுள்ள பழமையான பேருந்துகளும் இதில் உள்ளடங்கும்.

கடந்த நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பின்போது, மத்திய அரசு வாகன அழிப்புக் கொள்கையை அறிவித்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களும் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதில் தேர்ச்சியடையாத வாகனங்கள் அழிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியது.

இந்நிலையில் 2023 ஏப்ரல் முதல் 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் அழிக்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகிறது. மாநில அரசுகள் தங்கள் வசமுள்ள 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் தங்கள் பழைய வாகனங்களை அழிக்க அரசு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று மாநிலங்களிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

43 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்