லாரி மீது பேருந்து மோதி தீ பிடித்ததில் 12 பேர் உயிரிழப்பு; 30 பேர் காயம் - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

By செய்திப்பிரிவு

நாசிக்: மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக், அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் நேற்று காலை 5.15 மணியளவில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து டீசல் டேங்க் லாரி மீது மோதியது. அப்போது தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென வேகமாக பரவியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து சில பயணிகள் ஜன்னல் வழியாக அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30 பேர் மருத் துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாசிக் பேருந்து விபத்து குறித்த தகவல் அறிந்து வேதனைப்பட்டேன். இந்த விபத்தில் தங்கள் அன்புக் குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய் கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல உயிரிழந்தவர் களின் குடும்பத்தின ருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மகாராஷ் டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் நேற்று காலையில் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் உருக்குலைந்து காணப்படும் பேருந்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

9 mins ago

வணிகம்

21 mins ago

இந்தியா

46 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்