மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான அமரிந்தர் சிங், சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று வழங்கினார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி அரசிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற, முன்னாள் முதல்வரான அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக முயன்று வருகிறது.
தேர்தல் நெருங்கும் சூழலில் சட்லஜ் யமுனா இணைப்பு கால்வாய் விவகாரம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் சட்லஜ் யமுனா கால்வாய் விவகாரத்தில் பஞ்சாப் அரசுக்கு எதிராக கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பஞ்சாப் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அப்போதோ மக்களவையில் இருந்து விலகுவதாக அமரிந்தர் சிங் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனை நேற்று சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அமரிந்தர் சிங் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago