எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு

By செய்திப்பிரிவு

எல்லையில் பாகிஸ்தான் படை யினர் அத்துமீறி தாக்குதல் நடத்து வது அதிகரித்து வருவதால் இந்திய-பாகிஸ்தான் எல்லையை யொட்டிய பகுதி நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார்.

பாகிஸ்தானின் பீரங்கி தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக் பங்கேற்றனர்.

ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லை கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதி நிலவரம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

அப்போது பாகிஸ்தான் படை வீரர்களின் தாக்குதலை முறியடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரிடம் ராணுவ உயரதிகாரிகள் எடுத்துக்கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

25 mins ago

வாழ்வியல்

16 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்