மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 49 தொகுதி களுக்கு நான்காம்கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 78.05 சதவீத வாக்குகள் பதிவாயின.
மொத்தம் 49 தொகுதிகளில் 345 வேட்பாளர்கள் களத்தில் உள்ள னர். இவர்களில் 40 பேர் பெண்கள். 12,500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 11 மணி வரை சுமார் 42 சதவீத வாக்குகள் பதிவாயின. கடும் வெப்பம் காரணமாக மதியம் வாக்குப்பதிவு மந்தமாக நடை பெற்றது. பிற்பகலில் ஓரளவு நிலைமை சீரடைந்தது. மாலை 3 மணி அளவில் 67 சதவீதமும் மொத்தமாக 78.05 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
நேற்று நடைபெற்ற தேர்தலில் நிதியமைச்சர் அமித் மித்ரா உட்பட 7 அமைச்சர்கள் போட்டியிட்டனர். முன்னாள் அமைச்சர் மதன் மித்ரா சாரதா நிதி மோசடி வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டுள்ளதால் அவருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.
231 பேர் கைது
பாரக்பூர் பகுதியில் கள்ள வாக்கு, 144 தடையுத்தரவை மீறுதல் உள்ளிட்ட தேர்தல் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்ட 231 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை, காவல் ஆணையர் நீரஜ் சிங் உறுதி செய்துள்ளார்.
டம்டம் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் தன்மய் பட்டாச்சார்யா வின் கார் மீது சிலர் கல்வீசியதில், அவருக்கு கையில் காயம் ஏற் பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். பீஜ்புர் பகுதியில் மார்க்சிஸ்ட் தொண்டர் வீடு மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago