மத்திய பட்ஜெட் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான வரும் 31-ம் தேதி காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அன்றைய தினம் மாலை பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 31-ம் தேதி பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டம், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் ஆகியவையும் நடைபெறும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

58 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்