தடுப்பூசி செலுத்துவதில் சிறார்கள் உற்சாகம்: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் உற்சாகம் காட்டி வரும் சிறார்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த 3-ம் தேதி முதல் 15-18 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த பதிவைப் பார்த்த பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியுள்ளதாவது:

இளம் மற்றும் இளமையான இந்தியா, நாட்டு மக்களுக்கு வழி காட்டி வருகிறது. அதிக அளவில் சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது ஊக்கமளிக்கும் செய்தியாகும். இந்த வேகத்தை நாம் தக்க வைத்துக் கொள்வோம்.

தடுப்பூசி போடுவதும், கரோனா வைரஸ் தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுவதும் முக்கியம். நாம் அனைவரும் ஒன்றாக கூடி நின்று, இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 mins ago

தமிழகம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்