தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா - சத்தீஸ்கர் மாநில எல்லையில் பேரூரு, இல்மாட்டி, ஊசூரு ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் சீனியர் மாவோயிஸ்ட் சுதாகர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இரு மாநில போலீஸாரும் அந்தப் பகுதிகளுக்கு ஆயுதங்களுடன் சென்றனர். அங்கு சுமார் 3 நாட்களாக மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தெலங்கானா எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் நேற்று அதிகாலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வெகுநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உட்பட 4 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் ஹைதராபாத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அவர் ஹெலிகாப்டர் மூலம் வாரங்கல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்