பெங்களூரு: கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் நேற்று பெங்களூருவில் கூறியதாவது: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 15,617 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 145 போலீஸாரும், 18 மருத்துவ கல்லூரி மாணவர்களும் அடங்குவர். பெங்களூருவில் கரோனா பரவல் வேகம் 10 சதவீதத்தை கடந்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் அசோக், சோமசேகர் உள்ளிட்டோர் நலமாக உள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது.
கர்நாடகாவில் கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு வரும் 31-ம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு 31-ம் தேதிவரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா மாநில எல்லைகள் கண்காணிக்கப்பட்டு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருவோர் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப் படுகின்றனர். இவ்வாறு அமைச்சர் சுதாகர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
தமிழகம்
12 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
46 mins ago
விளையாட்டு
38 mins ago
இந்தியா
46 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago