புதுடெல்லி: கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கும் அமெரிக்க வேளாண் துறைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவுக்கு மீண்டும் மாம்பழங்களை இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளது. மாம்பழம் தவிர, மாதுளையும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் முதல் ஏற்றுமதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஒப்பந்தத்தின்படி, செர்ரி மற்றும் கால்நடை உணவான ஆல்பா ஆல்பா வைக்கோலை அமெரிக்காவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த இறக்குமதி தொடங்கும்.
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான 12-வது வர்த்தக கொள்கை சந்திப்பு கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இரு நாடுகளுக்கிடையே புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago