புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளது. 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. இதுவரை 320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை டெல்லியில் அதிகபட்சமாக 263 பேருக்கும், மகாராஷ்டிராவில் 257, குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, கேரளாவில் 65 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,154 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்:13,154.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,48,22,040.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 7,486.
இதுவரை குணமடைந்தோர்: 3,42,58,778.
நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.40% என்றளவில் உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 268.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,80,860
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 82,402
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,43,83,22,742 கோடி.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வணிகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
க்ரைம்
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
க்ரைம்
10 hours ago
இந்தியா
10 hours ago