திருமலையில் டிச.17 முதல் ஆண்டாள் திருப்பாவை சேவை

By என்.மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 11 மாதங்கள் வரை ஏழுமலை யானுக்கு சுப்ரபாத சேவை அதி காலை நடைபெறுவது ஐதீகம். அந்த நேரத்தில் சுவாமி துயில் எழுப்பப்பட்டு, அன்றைய நாளின் இதர சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.

ஆனால், தமிழ் மாதமான மார் கழி மாதத்தில் மட்டும் ஆண்டாள் அருளிய திருப்பாவையை பாடி ஏழுமலையான் துயில் எழுப்பப் படுகிறார். இந்த ஆண்டு, 16-ம் தேதி மார்கழி மாதம் பிற்பகல் 12.26 மணிக்கு பிறப்பதால், மறுநாள் 17-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் 2 நாட்களாக அதிகமாக காணப்பட்டது. திருப் பதியில் கோவிந்தராஜர் கோயில், பத்மாவதி தாயார் கோயில், கபில தீர்த்தம், நிவாச மங்காபுரம் ஆகிய தேவஸ்தான கோயில் களிலும் கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஞாயிறு மட்டும் 28,476 பேர் ஏழுமலையானை தரிசித்து ரூ. 2.59 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர். 13,203 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்