திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 11 மாதங்கள் வரை ஏழுமலை யானுக்கு சுப்ரபாத சேவை அதி காலை நடைபெறுவது ஐதீகம். அந்த நேரத்தில் சுவாமி துயில் எழுப்பப்பட்டு, அன்றைய நாளின் இதர சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.
ஆனால், தமிழ் மாதமான மார் கழி மாதத்தில் மட்டும் ஆண்டாள் அருளிய திருப்பாவையை பாடி ஏழுமலையான் துயில் எழுப்பப் படுகிறார். இந்த ஆண்டு, 16-ம் தேதி மார்கழி மாதம் பிற்பகல் 12.26 மணிக்கு பிறப்பதால், மறுநாள் 17-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் 2 நாட்களாக அதிகமாக காணப்பட்டது. திருப் பதியில் கோவிந்தராஜர் கோயில், பத்மாவதி தாயார் கோயில், கபில தீர்த்தம், நிவாச மங்காபுரம் ஆகிய தேவஸ்தான கோயில் களிலும் கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஞாயிறு மட்டும் 28,476 பேர் ஏழுமலையானை தரிசித்து ரூ. 2.59 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர். 13,203 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
54 mins ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago