இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 91 கோடியை கடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 72,51,419 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 91 கோடியைக் (91,54,65,826) கடந்துள்ளது. 88,75,020 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 29,639 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,31,50,886- ஆக அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.93 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் முதல் இதுவே அதிகமான அளவு.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 100 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,52,902; கடந்த 201 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை. நாட்டில் மொத்தம் கோவிட் சிகச்சை பெறுபவர்களின் விகிதம் தற்போது 0.75 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,41,642 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 57.53 கோடி கொவிட் பரிசோதனைகள் (57,53,94,042) செய்யப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் தொடர்ந்து 102 நாட்களாக 3 சதவீதத்திற்கும் கீழே, 1.66 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.61 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை 36 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 119 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
40 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
1 hour ago