ராகுலை சந்தித்தார் கண்ணய்யா

By ஐஏஎன்எஸ்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் நேற்று சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவின் நினைவு தின நிகழ்ச்சியின் போது இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டதாக டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு கண்டனம் தெரிவித்தும், கண்ணய்யா குமாரை விடுவிக்கக் கோரியும் அப்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குரல் எழுப்பினார்.

இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேற்று கண்ணய்யா குமார் சந்தித்து பேசினார்.

டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அவரது வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஜேஎன்யூ விவகாரம் குறித்து இருவரும் பேசியதாக கூறப் படுகிறது.

இந்த சந்திப்பின்போது கண்ணய்யாவுடன் ஜேஎன்யூ மாணவர் சங்கப் பிரதிநிதிகளும், ஏஐஎஸ்எப் சங்கத்தினரும் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

49 mins ago

வாழ்வியல்

40 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்