கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை 75.89 கோடியைக் கடந்தது

By செய்திப்பிரிவு

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 75.89 கோடியைக் கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 75.89 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 61,15,690 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்டத் தகவலின்படி, மொத்தம் 76,68,216 முகாம்களில் 75,89,12,277 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 38,012 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,25,22,171 ஆக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம், 97.62 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 80 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 27,176 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,51,087 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.05 சதவீதம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 16,10,829 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 54,60,55,796 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 82 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.00 சதவீதமாகவும், தினசரித் தொற்று உறுதி விகிதம் 1.69 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 16 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 99 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் காணப்படுகிறது.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்