ஹைதராபாத் ரோஷன் தாலா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நரேஷ் (35). இவரது மனைவி சதாசம்மாள் (30). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு திரும்பிய நரேஷ், மனைவியிடம் ஆம்லெட் போட்டு தருமாறு கேட்டுள்ளார். ஏற்கெனவே இருந்த முட்டைகளை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டதால் ஆம்லெட் போட்டு தர முடியாது என மனைவி தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நரேஷ், மனைவி சதாசம்மாள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
சதாசம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அண்டை வீட்டார், உடல் முழுவதும் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக தனது மரணத்துக்கு கணவரும், அவரது குடும்பத்தாரும் தான் காரணம் என சதாசம்மாள் மரண வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பியோடிய கணவர் நரேஷை போலீஸார் தேடிவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
35 mins ago
தமிழகம்
52 mins ago
வாழ்வியல்
43 mins ago
இந்தியா
57 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago