நாடு முழுவதும் 41.76 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கல்: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு மருந்து வழங்கலின் 187-வது நாளான இன்று 41.76 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்றிரவு (ஜூலை 21) 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 41.76 கோடிக்கும் அதிகமானோருக்கு (41,76,56,752) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 20.83 லட்சம் (20,83,892) தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன

18-44 வயது பிரிவில் 10,04,581 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 95,964 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/, யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 13,04,46,413 பேர் முதல் டோசையும், 53,17,567 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு இது வரை செலுத்தியுள்ளன.

ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 75,35,536 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 3,57,132 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 237330 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 1757 பேர் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்