இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கடந்த 118 நாட்களில் இல்லாத அளவு 31,443 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,31,315 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,09,07,282
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 31,443
இதுவரை குணமடைந்தோர்: 3,00,63,720
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 49,007
கரோனா உயிரிழப்புகள்: 4,10,784
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 2,020
மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்கெனவே பலியானவர்கள் விடுபட்ட கணக்கு சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,31,315
சிகிச்சை உள்ளோர் எண்ணிக்கை கடந்த 109 நாட்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது.
குணமடைவோர் விகிதம் 97.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை: 38,14,67,646
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
48 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago