ஜம்மு-காஷ்மீரின் லடாக் பிராந்தி யத்தில் உள்ள சியாச்சின் பனிமலை யில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதில் ஒரு அதிகாரி உட்பட 10 இந்திய ராணுவ வீரர்கள் காணாமல் போயுள் ளனர். அவர்கள் அனைவரும் பனிச் சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப் படுவதால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் இரவு, பகல் பாராமல் எல்லை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த பனிமலையில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒரு அதிகாரி உட்பட 10 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் அனைவரும் பனிச்சரிவில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப் படுகிறது.
இதையடுத்து விமானப்படையின் ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ வீரர்களைக் கொண்டு அங்கு தேடுதல், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட் டுள்ளன. இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளரான கர்னல் எஸ்.டி.கோஸ்வாமி உறுதி செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
42 mins ago
இந்தியா
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
11 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
சுற்றுலா
4 hours ago
கல்வி
3 hours ago