55 நாட்களுக்குப் பின் தினசரி கரோனா தொற்று குறைந்த அளவில் அதிகரிப்பு: 4 லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு

By ஏஎன்ஐ

நாட்டில் 55 நாட்களாக தினசரி கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் முதல் முறையாக குறைந்த அளவில் அதிகரித்து, 45 ஆயிரத்து 892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், 43 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 45,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 45 ஆயிரத்து 892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 55 நாட்களாகக் குறைந்துவந்த தினசரி பாதிப்பு குறைந்த அளவில் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 784 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 7 லட்சத்து 9 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த பாதிப்பில், 1.50 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவில் குணமடைந்தோர் சதவீதம் 97.18 ஆக உள்ளது. 2 கோடியே 98 லட்சத்து 43 ஆயிரத்து 825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 817 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 5 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 93 ஆயிரத்து 800 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 42 கோடியே 52 லட்சத்து 25 ஆயிரத்து 897 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 36.48 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்