தகவல் ஆணையராக மாத்தூர் நியமனம்

By செய்திப்பிரிவு

பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் ஆர்.கே. மாத்தூர் தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு தலைமை தகவல் ஆணையராக பணியாற்றிய விஜய் சர்மா கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய ஆணையராக ஆர்.கே. மாத்தூர் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.

மாத்தூருக்கு தற்போது 62 வயதாகிறது. அவர் 65 வயதாகும் வரை 3 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார். தலைமை தகவல் ஆணையத்தில் தற்போது 33,724 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அந்த மனுக்களுக்கு விரைந்து பதில் அளிக்க புதிய ஆணையர் மாத்தூர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர் வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்