அவசரநிலையை எதிர்த்தவர்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி நமது ஜனநாயக நெறிமுறைகளை காங்கிரஸ் இப்படித்தான் நசுக்கியது என குறிப்பிட்டுள்ளார்.
அவசர நிலையை எதிர்த்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்த சிறந்த தலைவர்கள் அனைவரையும் பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
அவசர நிலையை அனுசரிப்பதை முன்னிட்டு ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில் பிரதமர் கூறியதாவது.
‘‘அவசரநிலையின் கருப்பு நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது. 1975 முதல் 1977ம் ஆண்டு வரையிலான காலம், அமைப்புகளின் திட்டமிட்ட அழிவை கண்டது.
நாட்டின் ஜனநாயக உணர்வை வலுப்படுத்த சாத்தியமான அனைத்தையும் செய்வோம் எனவும் நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதிப்புகளுக்கு ஏற்ப வாழ்வோம் எனவும் நாம் உறுதி ஏற்போம்.
நமது ஜனநாயக நெறிமுறைகளை காங்கிரஸ் இப்படித்தான் நசுக்கியது. அவசரநிலையை தடுத்து இந்திய ஜனநாயகத்தை பாதுகாத்த அனைத்து சிறந்த தலைவர்களையும் நாம் நினைவு கூர்கிறோம்’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
26 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
37 mins ago
வாழ்வியல்
28 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago