இந்தியாவில் கரோனா தொற்று கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு 1,00,636 ஆக குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 14,01,609 ஆக சரிவடைந்துள்ளது.
கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,636 ஆக உள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,89,09,975
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,00,636
இதுவரை குணமடைந்தோர்: 2,71,59,180
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,74,399
கரோனா உயிரிழப்புகள்: 3,49,186
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 2427
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 14,01,609
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 23,27,86,482
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 36,63,34,111பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 15,87,589 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
24 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago