தினசரி கரோனா பாதிப்பு 1 லட்சமாக குறைந்தது; 2 மாதங்களில் இல்லாத அளவு சரிவு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா தொற்று கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு 1,00,636 ஆக குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 14,01,609 ஆக சரிவடைந்துள்ளது.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,636 ஆக உள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,89,09,975

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,00,636

இதுவரை குணமடைந்தோர்: 2,71,59,180

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,74,399

கரோனா உயிரிழப்புகள்: 3,49,186

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 2427

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 14,01,609

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 23,27,86,482

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 36,63,34,111பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 15,87,589 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்