சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் எம்எல்ஏ: ஒரு வாரம் இடைநீக்கம்

By பிடிஐ

ஒடிஷா சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் எம்எல்ஏவை ஒரு வாரம் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து இடை நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிஷா சட்டப்பேரவை நடந்து கொண்டிருந்தபோது, காங்கிரஸ் எம்எல்ஏ நபா கிஷோர் தாஸ் செல்போனில் ஆபாசப் படம் பார்த்துள்ளார். இது, சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந் உள்ளூர் தொலைக் காட்சி கேமராவில் பதிவானது.

பிஜு ஜனதா தளம் எம்எல்ஏ பிரமிளா மாலிக் இவ்விவகாரத்தை பேரவைத் தலைவரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். “ஜனநாயகத்தின் கோயிலாகக் கருதப்படும் இடத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை சகித்துக் கொள்ள முடியாது. தாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து, கிஷோர் தாஸை ஒரு வாரம் அவை நீக்கம் செய்து பேரவைத் தலைவர் நிரஞ்சன் பூஜாரி உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கிஷோர் தாஸ் கூறும்போது, “நான் ஒருபோதும் ஆபாச படம் பார்க்கவில்லை. மொபைலில் தவறுதலாக யூ டியூப்பை திறந்துவிட்டேன். அதனை மூட முயற்சிக்கும்போதுதான் கேமராவில் பதிவாகியுள்ளது. நடந்தது துரதிர்ஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்