ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு முதன்முறை: இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு  2 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது 

By செய்திப்பிரிவு

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,96,427 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு முதன்முறையாக 2 லட்சத்திற்கும் குறைவாக கரோனா தொற்று குறைந்துள்ளது.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,69,48,874

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,96,427

இதுவரை குணமடைந்தோர்: 2,40,54,861

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,26,850

கரோனா உயிரிழப்புகள்: 3,07,231

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3,511

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 25,86,782

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 19,85,38,999

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 33,25,94,176 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,58,112 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

43 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்