நாட்டில் 125 கோடி இந்தியர்களும் தேசப்பற்று மிக்கவர்கள், அதற்கு யாரும் சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. இதில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு கடந்த 27-ம் தேதி பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியா என்பதே எனது அரசின் மதம், அரசமைப்புச் சட்டம் புனித நூல் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு நேற்று அவர் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் பிரிவினைக்கு ஒருபோதும் இடம் தரக்கூடாது. இந்தியராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். 125 கோடி இந்தியர்களின் தேசப்பற்றுக்கு யாரும் சான்றிதழ் தர தேவையில்லை. நாட்டில் ஒற்றுமையும் சமூக நல்லிணக்கமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியா வேகமாக முன்னேறும். நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவருக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டால் அது நம் நாட்டுக்கு ஒரு கருப்புப் புள்ளி. அதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
37 secs ago
க்ரைம்
39 mins ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago