அசாமில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது என அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனேவால் கூறியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்து முடிந்துவிட்டன. 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலில் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளியான போடோலேண்ட் மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டது காங்கிரஸ்.
மேலும் இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாலிக் கனமார்ஷா போன்ற கட்சிகளும் காங்கிரஸ் அணியில் இணைந்தன.
சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில் ஆளும் பாஜகவுக்கு தேர்தலில் கடும் சவால் ஏற்பட்டது. எனினும் இந்த தேர்தலில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியே காணப்பட்டது.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக 80 இடங்களிலும் காங்கிரஸ் அணி 40 இடத்திலும் முன்னணியில் உள்ளன.
இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனேவால் கூறுகையில் ‘‘அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியைமக்கும் சூழல் உருவாகியுள்ளது. மக்கள் பெருமளவு எங்களுக்கு ஆதரவு தரும் நிலை காணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையும் போது பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும். இதற்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
10 mins ago
இந்தியா
18 mins ago
க்ரைம்
15 mins ago
இந்தியா
21 mins ago
தமிழகம்
43 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago