2 தமிழர்கள் உள்பட 136 பேருக்கு கர்நாடக அரசின் கெம்பே கவுடா விருது: முதல்வர் சித்தராமையா வழங்கினார்

By செய்திப்பிரிவு

கர்நாடக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கெம்பே கவுடா விருது' நிகழாண்டில் 2 தமிழர் கள் உள்பட 136 பேருக்கு வழங்கப்பட்டது.

பெங்களூரில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா விருதுகளை வழங்கினார்.

கி.பி. 1537-ம் ஆண்டு கெம்பே கவுடா என்ற குறுநில மன்னரால் பெங்களூர் நகரம் உரு வாக்கப்பட்டது. எனவே அவரது நினைவாக பெங்களூரில் பல்வேறு துறைகளில் சாதித்த வர்களுக்கு கர்நாடக அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு கெம்பே கவுடா விருதுக்கு 600 பேர் விண்ணப்பித்தனர். அந்த விண் ணப்பங்களை 16 பேர் கொண்ட குழு பரிசீலித்து, அவர்களில் 136 பேரை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வர் சித்தராமையா விருதுகளை வழங்கினார்.

இலக்கியத் துறையில், கன்னட அகராதியை உருவாக்கிய‌ நிகண்டு அறிஞர் ஜே.வெங்கட சுப்பையா, திரைத் துறையில் இயக்குநர் கே.எஸ்.எல்.சுவாமி, நடிகர்கள் சாயிபிரகாஷ், ரமேஷ் பட், சதாஷிவ் பிரம்மாவர், விளை யாட்டுத் துறையில் கிரிக்கெட் வீரர் ஆர்.வினய் குமார், முன்னாள் ஹாக்கி வீரர் அஷிஷ் பல்லால் உள்ளிட்ட பலர் விருதை பெற்றுக் கொண்டனர்.

2 தமிழர்களுக்கு விருது

பெங்களூர் தமிழர்களான பொய்க்கால் குதிரை கலைஞர் சுந்தரமூர்த்தி (கலைத் துறை), கர்நாடக கன்னட தமிழர் கூட்ட மைப்பின் தலைவர் ஐ.எம்.எஸ்.மணிவண்ணன்(சமூக சேவை) ஆகியோருக்கும் கெம்பே கவுடா விருதும் பட்டயமும் வழங் கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

11 mins ago

சினிமா

18 mins ago

விளையாட்டு

41 mins ago

வணிகம்

53 mins ago

இந்தியா

55 mins ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்