கரோனாவை கட்டுப்படுத்த ஞாயிறு ஊரடங்கு: வெறிச்சோடியது போபால்

By செய்திப்பிரிவு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய பிரதேசத்தில் போபால் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு என்பதால் சாலைகளில் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டுகிறது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மகாராஷ்டிராவி, நாக்பூர், அமராவதி, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதித்த பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிராவுக்கு அருகில் உள்ள மாநிலமான மத்திய பிரதேசத்திலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு ஏற்கெனவே அமலில் உள்ளன.

இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை மத்திய பிரதேச அரசு அறிவித்தது. இந்த 3 முக்கிய நகரங்களிலும், மறு அறிவிப்பு வரும் வரை எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போபால் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு என்பதால் சாலைகளில் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. . கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமும் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்