மீண்டும் 40  ஆயிரத்தை நெருங்கியது கரோனா தொற்று:  இந்த ஆண்டில் முதன்முறை

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,726 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதங்களுக்கு பிறகு டிசம்பர் மாதத்தில் முதல் வாரத்தில் இருந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,14,331 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 20,654 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,10,83,679பேர் குணமடைந்தனர்.

கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 154பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,59,370 ஆக அதிகரிதுள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,71,282 ஆக உள்ளது. இதுவரை 3,93,39,817பேர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

க்ரைம்

18 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

3 mins ago

தமிழகம்

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

மேலும்