ஆந்திராவில் கனமழை எதிரொலி: சென்னையில் இருந்து செல்லும் 27 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

By செய்திப்பிரிவு

கனமழை காரணமாக சென் னையில் இருந்து ஆந்திரா வழியாக இயக்கப்படும் 27 ரயில்கள் இன்று ரத்து செய் யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. இதன் கார ணமாக சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் 27 ரயில்கள் 18-ம் தேதி (இன்று) ரத்து செய்யப்படுகின்றன. ஜம்முதாவி, ஜனசதாப்தி, ஹவுரா கோரமண்டல், நவ ஜீவன், சார்மினார், கிராண்ட் டிரங்க், ஹவுரா மெயில் உட்பட 27 ரயில்கள் ரத்து செய்யப் படுகின்றன.

இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் பெற சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தகவல் மையத்தை 044-25357398 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்