பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் சத்ருகன் சின்ஹா இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை.
பாஜகவில் எல்.கே. அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படு கிறது. பிஹார் மாநில மூத்த தலை வரான பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா, அத்வானிக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால் அவரும் ஓரம் கட்டப்பட்டிருப்பதாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில் பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு 40 நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் பாஜக அளித்தது. அதில் பிஹார் மண்ணின் மைந்தரான சத்ருகன் சின்ஹாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
முதல்கட்ட பேரவைத் தேர்தல் இன்று தொடங்கும் நிலையில் அவர் இதுவரை பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை. தற்போதைய முதல்வர் நிதிஷ்குமாருக்கு சத்ருகன் சின்ஹா மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே தேர்தலுக்குப் பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
31 mins ago
இந்தியா
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
10 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
சுற்றுலா
3 hours ago
கல்வி
3 hours ago